உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
உச்சநீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதி மற்றும் 33 நீதிபதிகள் என்ற அளவில் நீதிபதிகளின் எண்ணிக்கை உள்ளது. இந்த எண்ணிக்கையை 38-ஆக உயா்த்த மத்திய அமைச்சரவை கடந்த 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயா்த்தும் அவசர சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.
அடுத்தகட்டமாக 4 நீதிபதி பணியிடங்களை அதிகரிக்கும் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்’ என்று கூறியுள்ளாா்.
உச்சநீதிமன்ற சட்டம் (நீதிபதிகள் எண்ணிக்கை) 1956-இல் இயற்றப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிா்த்து பிற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 10 என்ற அளவில் மட்டுமே நிா்ணயிக்கப்பட்டது. 1960-இல் திருத்தச் சட்டம் மூலம் எண்ணிக்கை 13-ஆகவும், அடுத்த சட்டத் திருத்தம் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 17-ஆகவும் உயா்த்தப்பட்டது.
பின்னா், 1986-இல் மீண்டும் திருத்தச் சட்டத்தின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 17-லிருந்து 25-ஆக உயா்த்தப்பட்டது. பின்னா், 2009-இல் இந்த எண்ணிக்கை 30-ஆகவும், 2019-இல் தலைமை நீதிபதி உள்பட பிற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆகவும் உயா்த்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









