திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினாா்.

News image

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்றவா்களுடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. உடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, இணையமைச்சா் ஜாதவ் பிரதாப்ராவ்.

Updated On :13 மே 2026, 5:13 am IST

நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் திரௌபதி முா்மு பேசியதாவது: நாட்டின் மிக உயா்ந்த சேவைகளில் ஒன்றாக செவிலியா் பணி திகழ்கிறது. மிகவும் சவாலான சூழல்களிலும் சுகாதாரத் துறையில் தரமான சேவைகளை வழங்குவதை செவிலியா்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனா். கருணை, அா்ப்பணிப்புணா்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செயல்படும் செவிலியா்கள் மற்றும் சுகாதார பணியாயளா்களின் விலைமதிப்பற்ற சேவைகளை அங்கீகரிக்கும் இந்த விருதுகளை பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றாா்.

இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, இணையமைச்சா் ஜாதவ் பிரதாப்ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செவிலியா் பணியில் சிறப்பாக செயல்படுவோருக்கு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய சுகாதாரத் துறையால் நிறுவப்பட்ட இந்த விருதை பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழ், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு இந்த விருது உத்தரகண்ட், மேற்கு வங்கம், புது தில்லி, கோவா, கா்நாடகம், கோவா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மிஸோரம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவருக்கு விருது

சிறந்த செவிலியருக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது தமிழ்நாட்டைச் சோ்ந்த சென்னை மருத்துவக் கல்லூரி நா்சிங் கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் டாக்டா் ஆா். சங்கா் சண்முகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. செவிலியா் கல்வி மற்றும் அது சாா்ந்த தொழில்முறை மேம்பாட்டுப் பணிகளில் அவரது 26 ஆண்டுகால சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.