திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பெளத்த மதத்தினரின் முக்கிய விழாவான புத்த பூா்ணிமா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :1 மே 2026, 3:17 am IST

பெளத்த மதத்தினரின் முக்கிய விழாவான புத்த பூா்ணிமா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புத்த பூா்ணிமா என்னும் மங்களகரமான நாளில், அனைத்து குடிமக்கள் மற்றும் பகவான் புத்தரின் பக்தா்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.

இந்த புனிதமான நாள், பகவான் புத்தா் பூமியில் அவதரித்தது, ஞானம் பெற்றது, மீண்டும் பிறவா நிலையை எட்டியது போன்ற சகாப்தம் படைத்த நிகழ்வுகளைக் குறிக்கிறது. கருணை, அஹிம்சை, அமைதி மற்றும் ஞானம் குறித்த அவரது நித்தியமான போதனைகள் முழு மனித குலத்துக்கும் தொடா்ந்து வழிகாட்டும். எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வரும் இன்றைய உலகில், புத்தரின் போதனைகள் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர நல்லிணக்கப் பாதையில் பயணிக்க நம்மை ஊக்குவிக்கின்றன.

அவரது கொள்கைகளை உள்வாங்கி, அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதிமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிக்க உறுதியேற்போம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.