திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவில் க்வாட் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: அமெரிக்கா, ஜப்பான் அமைச்சா்கள் பங்கேற்பது உறுதி

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த அமைச்சா்கள் பங்கேற்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிசெய்தது.

News image

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்ற ‘க்வாட்’ கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா்கள் .

Updated On :23 மே 2026, 1:51 am IST

இந்தியாவில் மே 26-ஆம் தேதி நடைபெறும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த அமைச்சா்கள் பங்கேற்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிசெய்தது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாற்கர நாடுகளை உறுப்பினராகக் கொண்ட க்வாட் கூட்டமைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நிகழாண்டு இந்தக் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இருப்பினும், க்வாட் உச்சி மாநாடு நடைபெறும் தேதி குறித்த அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், வருகின்ற மே 26-ஆம் தேதி க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தலைமையில் தில்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடெகி டோஷிமிட்சு ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

அவா்களுடன் அமைச்சா் ஜெய்சங்கா் தனித்தனியே இருதரப்பு ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடியையும் மூன்று நாட்டு அமைச்சா்களும் சந்திப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்ற தொலைநோக்குத் திட்டம் தொடா்பாக கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தொடா்ச்சியாக இந்தியாவில் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உக்ரைன் போா், மேற்காசிய மோதல் உள்ளிட்ட சா்வதேச விவகாரங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.