திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

குறுகிய தொலைவு இலக்குகளைத் துல்லியமாக தாக்க வல்ல அக்னி-1 பாலிஸ்டிக் ரக ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

News image
Updated On :23 மே 2026, 4:10 am IST

குறுகிய தொலைவு இலக்குகளைத் துல்லியமாக தாக்க வல்ல அக்னி-1 பாலிஸ்டிக் ரக ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, 700 கி.மீ. முதல் 1,200 கி.மீ வரை பாயும். 2,500 கிலோ வரையிலான வெடிகுண்டுகள் அல்லது அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

கடந்த 1979-ஆம் ஆண்டுமுதல் பயன்பாட்டில் உள்ள அக்னி-1 ஏவுகணை, ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. அப்போது, ஏவுகணையின் செயல்பாட்டு-தொழில்நுட்ப தரநிலைகள் சோதிக்கப்பட்டன. இந்தச் சோதனையில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அக்னி-1 ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவிடம் 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரை பாய்ந்து தாக்கக் கூடிய அக்னி 1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.