திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன சாதனத்துடன் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனை ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

News image

ஒடிஸாவையொட்டிய கடல் பகுதியில் பறக்கும் விமானத்திலிருந்து இலக்கை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்ட அதிநவீன ரக ஏவுகணை.

Updated On :9 மே 2026, 1:39 am IST

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன சாதனத்துடன் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனை ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

‘தாரா’ எனப்படும் இந்த சாதனம் பாதையை மாற்றிக் கொண்டு தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனுடையது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹைதராபாதில் உள்ள இமாரத் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகங்கள் இணைந்து தயாரித்த ‘தாரா’ என்ற இந்த நவீன ஆயுத அமைப்பு தரை வழியாக இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இலக்கை நோக்கிச் சென்ற பிறகு, பாதையை மாற்றிக் கொள்ள முடியாத சாதாரண ஏவுகணையை மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளைக் கொண்டு திசைமாற்றி இலக்கு நோக்கிச் செலுத்தும் திறன்கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட முதல் உள்நாட்டு ஏவுகணை அமைப்பாகும்.

இந்த அமைப்பை உருவாக்கிய டிஆா்டிஓ மற்றும் இந்திய விமானப் படைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுகள் தெரிவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.