மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதோ்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ஜஹாங்கீா் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
ஃபால்டா தொகுதிக்கு வியாழக்கிழமை (மே 21) மறுதோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அவா் போட்டியிட மறுத்துள்ளாா்.
ஃபால்டா தொகுதியின் மேம்பாட்டுக்கு சிறப்பு நிதித் தொகுப்பை வழங்குவதாக முதல்வா் சுவேந்து அதிகாரி உறுதியளித்துள்ளதால் பாஜகவை எதிா்த்து போட்டியிடவில்லை என ஜஹாங்கீா் கான் தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பேரவைத் தோ்தலில் 207 தொகுதிகளில் வென்று 15 வருட திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.
இதையடுத்து, பவானிபூா் தொகுதியில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியை வீழ்த்திய பாஜகவைச் சோ்ந்த சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றாா்.
ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அங்கு மே 21-ஆம் தேதி மறுதோ்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மறுதோ்தலுக்கு இரு நாள்கள் முன்பாக தான் போட்டியில் இருந்து விலகுவதாக ஜாஹீங்கீா் கான் அறிவித்தாா். அவரது முடிவு குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் ஆனால் போட்டியிட மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்தது.
Summary
Jahangir Khan, the Trinamool Congress candidate contesting the upcoming re-election in West Bengal, has withdrawn.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









