தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திரிணமூல் காங்கிரஸின் அனைத்து அமைப்புகளும் கலைப்பு!

அனைத்து அமைப்புகளையும் திரிணமூல் காங்கிரஸ் கலைத்திருப்பது பற்றி...

News image

மமதா பானர்ஜி - படம் - ஏஎன்ஐ

Updated On :3 ஜூன் 2026, 3:56 pm IST

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைப்புகளும், அணிகளும் கலைக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், 15 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று பெருந்தோல்வியைச் சந்தித்தது.

பாஜக 207 தொகுதிகளில் வென்று முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாய தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.

அவருக்கு எதிராக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பலர் போர்க் கொடி தூக்கியிருக்கும் நிலையில், மமதா பானர்ஜியின் நிகழ்ச்சிகளையும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கட்சியின் அனைத்து அமைப்புகளும், அணிகளும் கலைக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தீவிர பரிசீலனைக்குப் பிறகு, திரிணமூல் காங்கிரஸின் அனைத்து குழுக்களும், அமைப்புகளும் உடனடியாக கலைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நிலைகளிலும், கட்சி சார்பில் சுயபரிசோதனை, செயல்பாட்டு ஆய்வு மற்றும் அமைப்புசார் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். விரிவான ஆய்வுக்குப் பிறகு, கட்சியின் அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்.

கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதிலும், புதுப்பிக்கப்படுவதிலும், வீரியத்துடனும் உறுதியுடனும் எதிர்கால சவால்களை எதிகொள்ளும் வகையில் தயார்படுத்துவதில் கட்சி தொடர்ந்து உறுதியுடன் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Trinamool Congress dissolved all its frontal organisations immediately

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.