தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் மறுதேர்வு: கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்த அமைச்சர் அறிவுறுத்தல்!

நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தில்லியில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்.

News image

ஆலோசனையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Updated On :19 மே 2026, 7:07 pm IST

நீட் மறுதேர்வை கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எந்தவித பிழையுமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (மே 19) உத்தரவிட்டார்.

நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தில்லியில் உயர்நிலை அதிகாரிகளுடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (மே 19) ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் மறுதேர்வை எந்தவித குற்றச் செயல்களுக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்த சாத்தியமான இடங்களை மறுதேர்வுக்கு முன்பு ஆராய்ந்து அதனைக் களைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். குறைகளைக் கண்டறிந்த இடங்களில் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

களத்தில் கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிறுவனங்களிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதையும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்பட்டிருக்கும் நிலையில், வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

Summary

tighter security for leak-proof NEET re-exam Union Education Minister Dharmendra Pradhan orders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.