நீட் தேர்வு வினத்தாள் சட்டவிரோதமாக வெளியான விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் 2026 தோ்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடா்பாக விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் கணினிவழியில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று(மே 16) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் :
“நீட் தேர்வுக்கு தயாராகும் 22 லட்சம் குழந்தைகள் மோசடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி இதைப் பற்றி ஒரு சொல்கூட தெரிவிக்கவில்லை.
தர்மேந்திர பிரதானை இப்போதே பதவிநீக்கம் செய்யுங்கள் அல்லது நீங்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்து இதைப் பற்றி தான் பேசியுள்ள காணொலி விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
Summary
Remove Dharmendra Pradhan - Rahul Gandhi on Saturday demanded Prime Minister Narendra Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி இளைஞர் காங்கிரஸ் போராட்டம்!
சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!
சிபிஎஸ்இ விவகாரம்! கல்வி அமைச்சரை பிரதமர் நீக்கியிருக்க வேண்டும்: ராகுல்







