திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே. வங்கத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சு: அபிஷேக் பானர்ஜி மீது வழக்கு!

மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து...

News image

அபிஷேக் பானர்ஜி - ANI

Updated On :16 மே 2026, 2:49 pm IST

மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள், மே 5 ஆம் தேதி, வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ராஜீப் சர்க்கார் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அந்தப் புகாரில், கடந்த ஏப்ரல் 27 முதல் மே 3 வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளில் அபிஷேக் பானர்ஜி, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார்.

மேலும், அபிஷேக் பானர்ஜியின் இந்த கருத்துகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்புடையவை என்றும் புகார்தாரர் கூறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணையின் ஒருபகுதியாக தேர்தல் நேரத்தில் அவர் பேசிய கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 தொகுதிகளைக் கைப்பற்றியதன்மூலம் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்து ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

A case has been registered against Trinamool Congress MP Abhishek Banerjee for making remarks aimed at inciting violence during the elections in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.