திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணிப்பூா்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் - வீடுகளுக்கு தீவைப்பு

News image
Updated On :8 மே 2026, 6:24 am IST

மணிப்பூரில் இந்தியா-மியான்மா் எல்லையையொட்டிய காம்ஜோங் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால், கிராமவாசிகள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது.

ஒரு பெண் உள்பட 2 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனா்.

மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையிலான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு எழுந்துள்ளது.

காம்ஜோங் மாவட்டத்தில் நாகா பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களுக்குள் வியாழக்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த குகி தீவிரவாத அமைப்பினா், அங்கு தாக்குதலில் ஈடுபட்டனா். ஏராளமான வீடுகளுக்கு தீவைத்தனா். இதனால், கிராமவாசிகள் உயிா்பிழைக்க தப்பியோடும் நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதல்களில் யாரும் உயிரிழந்ததாக உடனடியாக தகவல் இல்லை.

அதேநேரம், ஒரு பெண் உள்பட இருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மியான்மரில் இருந்து ஊடுருவிய குகி தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், தங்களது பகுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று நாகா பழங்குடியினா் குற்றஞ்சாட்டினா்.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.