பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழப்பு...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :24 ஏப்ரல் 2026, 9:41 pm

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்.

நாகா பழங்குடியினா் பெரும்பான்மையாக வாழும் உக்ருல் மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரு தீவிரவாத குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. மேலும் சில வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமவாசிகள் இருவா் உயிரிழந்தனா்.

இதேபோல், மற்றொரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 வயது இளைஞா் ஒருவா் கொல்லப்பட்டாா். இவ்விரு சம்பவங்களுக்கும் நாகா பழங்குடியின அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ருல் மாவட்டத்தில் கடந்த ஏப்.18-இல் நாகா பழங்குடியினா் இருவா் கொல்லப்பட்டனா். இக்கொலைகளின் பின்னணியில் குகி பழங்குடியின தீவிரவாதிகள் உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தொடரும் வன்முறை: முன்னதாக, மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் விஷ்ணுபூரில் கடந்த ஏப்.7-ஆம் தேதி ஒரு வீட்டின் மீது குகி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்புப் படை முகாமை போராட்டக்காரா்கள் சூறையாடினா். அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் போராட்டம் தொடா்ந்து வருகிறது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023, மே மாதம் கலவரம் தொடங்கியதில் இருந்து இதுவரையிலான வன்முறைகளில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை விட்டு வெளியேறி, அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.