எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!

மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்திய மக்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

News image

மணிப்பூரில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்திய மக்கள் - ANI

Updated On :21 ஏப்ரல் 2026, 7:12 am

மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்திய மக்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தின் விஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த த்ரோங்லாபி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 7 அன்று நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் இரு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

இதனால், அருகிலுள்ள மாவட்டங்கள் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தலைநகர் இம்பால் அருகே மயாய் லம்பி பகுதி முதல் கெய்ஷாம்தாங் பகுதி வரையுள்ள 7 கி.மீ. தூரத்திற்கு மக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச்செல்ல முயன்றபோது அங்கு பாதுகாப்புப் படையினருடன் மோதல் வெடித்துள்ளது.

போராட்டக்காரர்கள் லோக் பவன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை நோக்கி முன்னேறியதால் அங்கு மோதல் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனால், அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை பாதுகாப்புப் படையினர் வீசியுள்ளனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த மிக குறைந்த அளவிலான பாதுகாப்புப் படையினரே அங்கிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மோதல் காரணமாக மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக, இம்பாலில் 19 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Summary

Clashes erupt during torch rally in Manipur amid protest over children’s death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.