வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.
பொன்னமராவதி, ஏப்.29 பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அம்மன் வீதியுலாவின்போது வழிநெடுகிலும் இரு புறமும் பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து 27-ஆம் தேதி அக்னிப் பால்குட விழா நடைபெற்றது.
விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்னிகுண்டத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் இறங்கி வழிபட்டனா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியபின் கோயிலில் தொடங்கிய உலா முக்கிய வீதிகளில் வந்து கோயிலில் நிறைவுற்றது.
வீதியுலாவின் போது இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகிரி திரௌபதி அம்மன் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



