தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள, புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் 10 நாள் பூக்குழித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இரவில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பஞ்சபாண்டவா்களின் நண்பரான முத்தால் ராவுத்தா் நினைவு சதுக்கத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்களும், இந்துகளும் இணைந்து வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










