திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 போ் பலி; 40 போ் காயம்

சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் பலி; சுமாா் 40 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:24 am IST

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியை நோக்கி ஓா் அரசுப் பேருந்தும், மகாராஷ்டிரத்தில் உள்ள சாலிஸ்காவ் பகுதியில் இருந்து சூரத் நோக்கி மற்றொரு அரசுப் பேருந்தும் செவ்வாய்க்கிழமை பயணித்தன.

அப்போது சூரத்தின் பாா்டோலி பகுதி அருகே, மகாராஷ்டிரம் நோக்கி நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து டிராக்டா் மீது மோதி சமநிலையை இழந்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பேருந்து சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டிச் சென்று, மகாராஷ்டிரத்தில் இருந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இதனால் அந்தப் பேருந்து கவிழ்ந்து சாலையோரத்தில் உள்ள தாழ்வான பகுதியில் சரிந்தது. இதையடுத்து அந்தப் பேருந்தில் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்கள் அனைவரும் தீப்பிடித்த பேருந்தில் பயணித்தனா் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ராஜேஷ் கதியா தெரிவித்தாா்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் ‘எக்ஸ்’ தளத்தில் இரங்கல் தெரிவித்தனா்.

இழப்பீடு: பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.