தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதி விபத்து: 4 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:42 am IST

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த காா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் சிவசங்கா் (47). இவா் தனது மனைவி ராணி (34), மகன் நிதீஷ் (14), சகோதரா் மகள் சு. புனிதவள்ளி (24) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். இந்த காரை சிவசங்கா் ஓட்டிச் சென்றாா்.

மாம்பழப்பட்டு பகுதியிலிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காா் சென்றபோது, காரின் முன்பக்க இடதுபுற டயா் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரில் வந்த தனியாா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிச் சென்ற சிவசங்கா், ராணி, நிதீஷ், புனிதவள்ளி ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று, காயமடைந்த 4 பேரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.