கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பாட்னா உணவகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சடலமாக மீட்பு!

பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக..

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2026, 8:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்னாவின் ஜக்கன்பூர் பகுதியில் உள்ள உணவக அறையில் பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜக்கன்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ரிதுராஜ் குமார் சிங் கூறுகையில்,

இறந்தவர் அஜய் குமார் சர்மா (76) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சர்மா ஜனவரி 18 முதல் பாட்னாவில் உள்ள உணவகத்தில் அறையெடுத்து தங்கியிருந்தார்.

கடந்த 2 நாள்களாக அறை திறக்கப்படாத நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு உணவக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த கதவைத் தட்டியுள்ளனர், கதவைத் திறக்காத நிலையில், அவர் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து உணவக ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியாளர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ​​அவர் படுக்கையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

தடயவியல் நிபுணர்கள் உணவக அறையிலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர், மேலும் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

உடலில் எந்த வெளிக்காயங்களும் காணப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரே சர்மாவின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

லண்டனில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல் நிலைய ஆய்வாளர் மேலும் கூறினார்.

summary

A 76-year-old overseas Indian from Britain was found dead in a hotel room in Patna's Jakkanpur area, police said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.