மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

ரூ. 5 லட்சம் லஞ்சம்: கா்நாடக பாஜக எம்எல்ஏ கைது

கா்நாடகத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்த அதிகாரிகளால் பாஜக எம்எல்ஏ கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடகத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்த அதிகாரிகளால் பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டாா்.

சிரஹட்டி தொகுதி எம்எல்ஏவான டாக்டா் சந்துரு லமணி, காடக் மாவட்டம் சின்சாலியை சோ்ந்த ஒப்பந்ததாரா் விஜய் புஜாா் என்பவரிடம் சிறிய நீா்ப்பாசன துறை வேலைகளை செய்து தரும் ஒப்பந்தத்தை பெற்றுத் தர ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பிறகு ரூ.5 லட்சம் வாங்கிக் கொள்ள சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விஜய் லோக் ஆயுக்தவிடம் புகாா் அளித்தனா். பின்னா் லோக் ஆயுக்த அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி, விஜய் ரூ.5 லட்சத்தை அளித்தாா். இதை சந்துரு லமணி வாங்கியபோது மறைந்திருந்த லோக் ஆயுக்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தினா். அப்போது அவரை மாா்ச் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டாா்.