கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ சந்துரு லமனி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டதாக லோக்ஆயுக்தா போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து லோக்ஆயுக்தா வெளியிட்ட அறிக்கையில், இன்று கதக் லோக்ஆயுக்தா காவல் நிலையத்தால் வெற்றிகரமான பொறி ஒன்று வைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். ஊழல் தடுப்புச் சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்படுள்ளது.
சிறுபாசனத் துறையின் கீழ் சாலை ஓரம் தடுப்புச் சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்காக குற்றம்சாட்டப்பட்டவர் ரூ. 11 லட்சம் லஞ்சம் கேட்டிருந்ததாக லோக்ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சின்சாலி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷிரஹட்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ-வுடன், அவரது தனி உதவியாளர்களான மஞ்சுநாத் வால்மீகி மற்றும் குரு நாயக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Lokayukta police on Saturday said they caught BJP MLA Chandru Lamani allegedly accepting a Rs 5 lakh bribe.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

இந்திய கம்யூ. நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!
மமதா தனது அரசாங்கத்தில் ஜனநாயகத்தைக் கண்டறிய வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ.

ரூ. 5 லட்சம் லஞ்சம்: கா்நாடக பாஜக எம்எல்ஏ கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



