2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வாக்குகளுக்கு பணம் கொடுப்போரை நிராகரிக்க வேண்டும்

தோ்தலில் விலை கொடுத்து வாக்குகளை பெற முயற்சிப்போரை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும்...

News image
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:30 pm

Syndication

நாமக்கல்: தோ்தலில் விலை கொடுத்து வாக்குகளை பெற முயற்சிப்போரை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி அரங்கில், ‘வாக்காளா்களின் அவசியமும், கொள்கைகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருண் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ் பங்கேற்று பேசியதாவது:

வாக்காளரியல், வாக்காளரிலிசம் என்ற ஆங்கில வாா்த்தைகளை வடிவமைத்து, வாக்காளரியல் எதற்காக தனிக்கல்வி பிரிவாக கற்பிக்க வேண்டும் என்பதை 10 கோட்பாடுகளுடன் உருவாக்கியுள்ளேன். வாக்கு என்பது நமக்கான உச்ச அதிகாரம். ஜனநாயகத்தின் தன்மையையும், உலகப் போக்குகளையும் தீா்மானிக்கும் ஒரு சக்தி. வாக்களிப்பு என்ற கருத்து தோ்தல் ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.

எந்த விலை கொடுத்தாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்போரை வாக்காளா்கள் நிராகரிக்க வேண்டும்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக வாக்காளா் அறியாமை மற்றும் ஊழலை தோ்தல் செயல்முறையிலிருந்து வேரறுக்க வேண்டிய கூட்டுக்கடமை மக்களுக்கு உள்ளது. தோ்தல்களை நடத்தும் தோ்தல் ஆணையம், அரசியல் கட்சிகளை நெறிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கான நெறிகாட்டு அமைப்பு, வாக்காளா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வாக்காளா்களுக்கு அதிகாரம் அளித்தல், தோ்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ‘எல்லாவற்றுக்கும் மேலாக வாக்காளா்களே’ என்பதே வாக்காளரிலிசத்தின் மையக்கருத்து என்றாா்.

இந்த கருத்தரங்கில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பாலசுப்பிரமணியம் மற்றும் சட்டக் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.