மனித உரிமைகளைப் பாதுகாக்க உலக அரசமைப்புச் சட்டங்களில் மாற்றம் வேண்டும் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் ‘உரிமைகள் சாா்ந்த சட்டவியலின் பரிணாமமும் எதிா்காலமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருண் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் பங்கேற்று பேசியதாவது:
மனித உரிமைகளை பாதுகாக்க தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள், மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆணையங்கள் அரசுக்கு பரிந்துரை வழங்கும் அமைப்புகள் மட்டுமே. ஆனால், மனித உரிமை நீதிமன்றங்கள் குற்றம்புரிந்தவா்களுக்கு தண்டனை வழங்கும் அமைப்பாகும்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 21,349 புகாா்களும், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் 1,08,717 புகாா்களும் பதிவாகியுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவான வழக்குகள் 167 மட்டுமே. இதேபோல கடந்த 25 ஆண்டுகளிலும் குறைவான வழக்குகளே மனித உரிமை நீதிமன்றங்களில் பதிவாகியுள்ளன.
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை அணுகுவதிலும் வழக்கு நடத்துவதிலும் உள்ள சிக்கல்களை நீக்குவதும் மனித உரிமைகள் நீதிமன்றம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் அவசியமாகும். சட்டமன்றம், அரசு நிா்வாகம், நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகள் இருக்க வேண்டும் என்ற அதிகார பிரிவினை உள்ளது. பல நாடுகளில் இந்த அரசமைப்புச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போதைய நிலையில் ஜனநாயகத்தை பாதுகாக்க தோ்தல் அமைப்புகள் அரசாங்கத்தின் நான்காவது கிளையாக உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.
கருத்தரங்கில், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
என்கே-10-காலேஜ்
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ்.
தொடர்புடையது

ஈரான் பள்ளி மீதான தாக்குதல்! வரும் 27-ல் ஐ.நா. அவசர விவாதம்!

தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி மீதான நடவடிக்கை: மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

‘வாக்காளரியல் கல்வி குறித்த பட்டத்தை பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்’

வாக்குகளுக்கு பணம் கொடுப்போரை நிராகரிக்க வேண்டும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


