அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்களிப்பு விரிவடைய வேண்டும் என்று பிரதமர் மோடி பேச்சு

News image

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி - PTI

Updated On :19 ஏப்ரல் 2026, 6:56 am

வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்களிப்பு விரிவடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் விஷ்ணுபூரில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, "பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால்தான், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை பெண்கள் ஆசிர்வதிக்கின்றனர்.

வளர்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண்களின் பங்கு விரிவடைய வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. மேலும், அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்.

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி - PTI

ஆனால், நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். மேற்கு வங்கத்தின் பெண்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் துரோகமிழைத்துள்ளது.

மேற்கு வங்க சகோதரிகள் 33 சதவிகித இடஒதுக்கீட்டை விரும்பினர். ஆனால், காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் சேர்ந்து சதிசெய்து, பெணளுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.

ஊடுருவல்காரர்களுக்காக சட்டத்தை மீறும் அதே திரிணமூல் காங்கிரஸ்தான், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சித்து, அரசியலமைப்பின் கழுத்தை நெரித்து வருகிறது.

மாபெரும் காட்டாட்சிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் மீது பழங்குடி பெண்கள் மிகுந்த வெறுப்பைக் கொண்டுள்ளனர்.

பாஜகதான், நாட்டுக்கு முதல் பழங்குடி பெண் தலைவரை வழங்கியது. ஆனால், காங்கிரஸும் திரிணமூல் காங்கிரஸும் சேர்ந்து ஒரு பழங்குடி குடியரசுத் தலைவரைத் தோற்கடிக்க ஒரு பெரிய விளையாட்டை விளையாடின.

இதன் பொருள், ஒரு பழங்குடி மகள் நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

Summary

West Bengal Polls 2026: More and more daughters should also enter politics, says PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.