திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திரிணமூல் - காங்கிரஸ் கட்சிகள் சதி செய்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து...

News image

நரேந்திர மோடி - பிடிஐ

Updated On :19 ஏப்ரல் 2026, 4:23 pm IST

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சதி செய்து தடுத்த திரிணமூல் காங்கிரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மேற்கு வங்க மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 19) தெரிவித்தார்.

மேலும், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் பெண்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்திற்குட்பட்ட விஷ்ணுபூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 19) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் திரிணமூல் காங்கிரஸை விமர்சித்து பிரதமர் மோடி பேசியதாவது:

’''திரிணமூல் காங்கிரஸ் பெண்களுக்கு அதிகாரமளித்தலையும் இட ஒதுக்கீட்டையும் விரும்பவில்லை. மேற்கு வங்க பெண்கள் மமதாவின் மகா காட்டு ராஜ்ஜியத்திற்கு சவால் விடுவதால், அம்மாநிலப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ சட்டப்பேரவை உறுப்பினர்களாகவோ மாறுவதை திரிணமூல் விரும்பவில்லை.

அதனால், அவர்கள் காங்கிரஸுடன் சதி செய்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தனர். இந்தத் தேர்தலில் மேற்கு வங்கப் பெண்கள் திரிணமூல் காங்கிரஸை தண்டிப்பார்கள்.

பாஜகவின் அடையாளம் என்பது பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்துள்ளது. வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் மகளிரின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், அதிகமான பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால், நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை மேற்கு வங்கத்தின் சகோதரிகளுக்கு துரோகமிழைத்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

TMC Congress conspired to block women’s quota Bill, will be punished in Bengal polls: PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.