மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!

மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரசாரம் மேற்கொள்வது குறித்து...

News image

பிரதமர் மோடி (கோப்புப் படம்) - Bharatiya Janata Party | யூடியூப்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:30 pm

மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை (ஏப். 9) தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இதையடுத்து, ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் மக்களிடையே நாளை பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், ஹால்டியா, அசன்சோல் மற்றும் சியூரி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் புர்பா மெதினிபூர் மாவட்டத்தின் ஹால்டியாவிலும், மதியம் அசன்சோலிலுள்ள திறந்தவெளி மைதானத்திலும், பின்னர் மதியம் 2 மணியளவில் சியூரியின் சந்த்மாரி மைதானத்திலும் நடைபெறவுள்ள 3 வெவ்வேறு பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் செல்வாக்கு மிகுந்த பகுதியாகக் கருதப்படும் ஹால்டியாவில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை, பிரதமர் மோடி கடந்த ஏப். 5 அன்று கூச் பெஹாரில் இருந்து துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

PM Modi will campaign for the Assembly elections in West Bengal April 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.