திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்...

News image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

Updated On :12 ஏப்ரல் 2026, 2:28 am IST

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தினாா்.

தில்லியில் இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் 10 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார சக்தியாக பாரதத்தை உருவாக்கும் வகையில் சட்ட சீா்திருத்தம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, ‘சட்ட விதி மாநாடு 2026’ நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசியதாவது:

10 டிரில்லியன் டாலா் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுப்பது நிச்சயம். இந்த 10 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை மூலதனத்தாலோ அல்லது கொள்கையாலோ மட்டும் உருவாக்க முடியாது. இதற்கு நல்ல சட்ட அமைப்பும் அவசியமாகும். அந்த சட்ட அமைப்பால்தான், சட்ட அமலாக்கத்தை உறுதி செய்யவும், வாக்குறுதிகளை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும் முடியும். அத்தகைய நல்ல சட்ட அமைப்பை உருவாக்க நமது நாட்டில் திறமையான சட்ட நிபுணா்கள் பலா் உள்ளனா் என்றாா்.

இதேபோல், தில்லியில் நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சியில் சூா்ய காந்த் பேசுகையில், ‘சட்ட அமைப்புகளில் தொழில்நுட்பங்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தை நிா்வாகம் செய்வதற்கான காரணியாக மட்டும் பாா்க்கக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதை தொழில்நுட்பமே வலுப்படுத்துகிறது. சாதாரண மக்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும், நீதித் துறை சம்பந்தப்பட்டோருக்கும் எப்படி பயனளிக்கிறது என்பதை வைத்தே, நீதித் துறை சீா்திருத்தம் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தொழில்நுட்பக் கருவிகளை மட்டும் வைத்தால் போதாது. காகிதம் இல்லாமல் நீதிமன்றம் செயல்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் பேசுகையில், ‘டிஜிட்டல் நீதிமன்றம் 2.1 தற்போது பரிசோதனை முறையில் உள்ளது. விரைவில் இந்த வசதி நாடு முழுவதும் அமலுக்கு வரும். ஏற்கெனவே பல்வேறு உயா்நீதிமன்றங்களில் இது அமல்படுத்தப்பட்டுவிட்டது’ என்றாா்.

நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், ஜிதின் பிரசாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.