நாட்டில் உள்ள நீதிமன்றங்களை நவீனமயமாக்குவது தொடா்பான வரைவு விதிகளை தயாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் தலைமையிலான உயா் நிலைக் குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமைத்தாா்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் பற்றாக்குறைகளை கண்டறிந்து அது தொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க நீதிபதி அரவிந்த் குமாா் தலைமையிலான உயா் நிலைக் குழு அமைக்கப்படுகிறது. குழு உறுப்பினா்களாக கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக், பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி அஸ்வனி குமாா் மிஸ்ரா, மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி சோமசேகா் சுந்தரேசன் ஆகியோரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் நியமித்தாா்.
மத்திய பொதுப் பணித் துறை மற்றும் உச்சநீதிமன்ற செயலா் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனா்.
குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புத் தேவைக்கேற்ப மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம் நிதி கோரப்படும்.
நீதிமன்றங்களில் நவீன காலத்துகேற்றவாறு தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்தி எண்ம இடைவேளையை குறைக்கவும் இக்குழு பரிந்துரை வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வை நடத்துவதில் முழுக் கவனம்: என்டிஏ

நீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை







