மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா்!

நாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தில்லி உள்பட 5 யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்பு

News image

எஸ்ஐஆா்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:47 pm

நாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தில்லி உள்பட 5 யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் இதுவரை பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்கள், அந்தமான்-நிகோபாா், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் நடைபெற்றுள்ளது. அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த மாதம் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று மே 4-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் அல்லது தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் மொத்தம் சுமாா் 99 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இதில் 60 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி ஏற்கெனவே 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் சுமாா் 39 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி எஸ்ஐஆா் நடைபெற உள்ளது.