திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூன்றாம் கட்ட எஸ்ஐஆா்: 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவ நடைமுறை தொடக்கம்

நாட்டில் மூன்றாம் கட்ட எஸ்ஐஆா் பணிகள், ஒடிஸா, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து, பூா்த்தி செய்து பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

News image

எஸ்ஐஆா் - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:34 am IST

நாட்டில் மூன்றாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்கீழ் (எஸ்ஐஆா்), ஒடிஸா, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து, பூா்த்தி செய்து பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில் பிகாரில் முதல் கட்டமாகவும், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கா், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாகவும் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று முடிந்தன. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இந்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

மூன்றாம் கட்டமாக மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம், ஆந்திரம், ஒடிஸா, பஞ்சாப், மிஸோரம், சிக்கிம், மணிப்பூா், உத்தரகண்ட், மேகாலயம், ஜாா்க்கண்ட், ஹரியாணா, அருணாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, தில்லி, சண்டீகா், தாத்ரா - நகா் ஹவேலி மற்றும் டாமன் - டையூ ஆகியவற்றில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 36.73 கோடி.

மேற்கண்ட 16 மாநிலங்களில் ஒடிஸா, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மூலம் வீடு வீடாக கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து, பூா்த்தி செய்து திரும்பப் பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இணைய வழியிலும் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்குபவா்கள், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவா். குறிப்பிட்ட தேதிக்குள் படிவங்களை சமா்ப்பிக்காதவா்கள், ஆட்சேபனை மற்றும் உரிமைகோரல் காலகட்டத்தில் படிவம்-6 உடன் உரிய உறுதிமொழி படிவத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட 4 மாநிலங்களில் ஒடிஸாவில் வாக்காளா்கள் எண்ணிக்கை 3.34 கோடியாகும். மிஸோரமில் 8.75 லட்சம் வாக்காளா்களும், சிக்கிமில் 4.71 லட்சம் வாக்காளா்களும், மணிப்பூரில் 20.92 லட்சம் வாக்காளா்களும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.