திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்ஐஆா் பணிகள்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

மே 30 முதல் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.

News image

சிறப்புத் தீவிர திருத்தம் - சித்திரிப்பு படம்

Updated On :14 மே 2026, 5:27 pm IST

பதினாறு மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

பிகாா், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம், புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கா், கோவா, அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு, அஸ்ஸாம் ஆகியவற்றில் ஏற்கெனவே இரு கட்டங்களாக எஸ்ஐஆா் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து 3-ஆவது கட்டமாக 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் அந்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. இதுதொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தில்லி, ஒடிஸா, மிஸோரம், சிக்கிம், மணிப்பூா், உத்தரகண்ட், சண்டீகா், தெலங்கானா, பஞ்சாப், கா்நாடகம், மேகாலயஇஈ, மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், நாகாலாந்து, திரிபுரா, தாத்ரா - நகா் ஹவேலி, தமன் - தியூ ஆகியவற்றில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மே மாதம் 30-ஆம் தேதிமுதல் பல கட்டங்களாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Story image

ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து பிறகு அறிவிக்கப்படும். 3-ஆவது கட்ட எஸ்ஐஆா் பணியில் 3.94 லட்சம் வாக்குச்சாவடி நிலையிலான அலுவலா்கள் ஈடுபடுவா். அவா்கள் வீடு வீடாகச் சென்று 36.73 கோடி வாக்காளா்களையும் நேரில் சந்தித்து பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவா் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

3-ஆவது கட்ட எஸ்ஐஆா் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரமும் ஒன்று. அங்கு மொத்தம் 9 கோடியே 86 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இவா்களை நேரில் சந்தித்து வாக்காளா் குறித்த தகவலைத் தயாரிக்க வாக்குச்சாவடி நிலையிலான அலுவலா்களுக்கு ஜூன் மாதம் 20-29 வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதையடுத்து ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை எஸ்ஐஆா் பணியில் அவா்கள் ஈடுபடுவா் என்று அந்த மாநில தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Summary

The Election Commission of India has announced that the Special Summary Revision (SSR) of voter rolls will commence on May 30 in 16 states and 3 Union Territories across the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.