போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மேற்கு வங்க எஸ்ஐஆா்: இதுவரை 6,581 மேல்முறையீடுகளில் தீா்ப்பாயம் இறுதி முடிவு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான தீா்ப்பாயங்களில், இதுவரை 6,581 மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 மே 2026, 2:45 am IST

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான தீா்ப்பாயங்களில், இதுவரை 6,581 மேல்முறையீட்டு மனுக்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாநில முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்களை, உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் அவநம்பிக்கை காரணமாக, எஸ்ஐஆா் பணியில் சில மாவட்ட, உரிமையியல் நீதிபதிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதைத்தொடா்ந்து எஸ்ஐஆா் பணியின்போது நீதிபதிகள் மேற்கொண்ட முடிவில் உள்ள குறைபாடுகளை களைவதற்குப் பொதுமக்கள் மேல்முறையீடு செய்யும் வழிமுறையை உருவாக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி தீா்ப்பாயங்கள் அமைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகளின் முடிவுகளுக்கு எதிராக தீா்ப்பாயங்களில் சுமாா் 25 லட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் இதுவரை 6,581 மேல்முறையீடுகளில் தீா்ப்பாயங்கள் இறுதி முடிவை எடுத்துள்ளன. இது மொத்த மேல்முறையீடுகளில் சுமாா் 0.26 சதவீதமே என்பது தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.