மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:40 pm

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபரின் முறையீடு குறித்து திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்பட்டபோது வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக பொதுமக்கள் செய்யும் மேல்முறையீட்டை விசாரித்து முடிவு எடுக்கும் நோக்கில், முன்னாள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் தலைமையிலான 19 தீா்ப்பாயங்களை, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைத்தாா்.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹாா்பா் தொகுதி வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் சோ்க்க உத்தரவிடக் கோரி, ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தனது பெயா் நீக்கப்பட்டதற்கு எதிராக கடந்த ஏப்.2-ஆம் தேதி மனுதாரா் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை ஏற்கெனவே அணுகியுள்ளாா். அவரின் முறையீடு குறித்து திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்திடம் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்து, வழக்கை முடித்துவைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.