தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு: ஸ்டென்ட் பொருத்தி அறுவைசிகிச்சை

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

News image

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு

Updated On :2 மார்ச் 2023, 11:47 am

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவைசிகிச்சை செய்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆர்யா பட நடிகை சுஷ்மிதா சென் இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஆஞ்ஜியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து, தனது இதயத்தில் ஸ்டென்ட் பொறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டகிராமில், உங்கள் இதயத்தை மகிழ்ச்சியுடனும் ஊக்கத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது உங்களுக்கு எப்போது தேவைப்படுமோ அப்பொழுது உங்களுடன் துணை நிற்கும். (எனது தந்தை சென்சுபிரின் அற்புதமான வார்த்தைகள்)

ஒரு சில நாள்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது.. ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளது.. மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்.. எனக்கு மிகப்பெரியஇதயம் இருக்கிறது என்பதை.

உரிய நேரத்தில் உதவிய ஏராளமானோருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது வேறொரு பதிவில் இடம்பெறும் என்றும் சுஷ்மிதா பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.