சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.
உலகிலேயே நிலவின் தென்துருவத்துக்கு மிக அருகே தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையைப் பெற வைத்த இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்து தனது பார்வையை சூரியன் பக்கம் திருப்பியிருக்கிறது.
இதையும் படிக்க.. நிலவில் ரோவர் நகர்ந்து செல்லும் புதிய விடியோ வெளியிட்டது இஸ்ரோ
சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி செலுத்தப்படும் என்று சனிக்கிழமை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ஒரு சில நிமிடங்கள் பேசிய சோம்நாத் இந்த தகவலை வெளியிட்டார்.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா - எல்1 விண்கலம் செலுத்தப்படவிருக்கிறது. இது விண்ணில் பாய தயாராக உள்ளது. சூழ்நிலை சாதமாக அமைந்தால் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவித்தார் சோம்நாத்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த அன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்- 1இல் தொடங்கிய நிலவுப் பயணம் சந்திரயான்- 2 என தொடா்ந்தது. சந்திரயான் 2 விண்கலம் (ஆா்பிட்டா்) இன்றைக்கும் நன்றாக செயல்பட்டு வருகிறது. சந்திரயான்- 3 விண்கலத்தின் வெற்றியைக் கொண்டாடும் இந்த நேரத்தில் சந்திரயான்- 1, சந்திரயான்- 2 விண்கலங்களைக் கட்டமைக்க பங்காற்றியக் குழுவினரையும் நன்றியோடு நினைத்துப் பாா்க்கிறோம். சந்திரயான்-3 மூலம் மிகப் பெரிய வளா்ச்சியை அடைந்துள்ளோம். இந்த வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல் 1 விண்கலம் அடுத்த மாதம் (செப்டம்பா்) விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


