டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வேட்பாளர்கள் சாதி, மதம் குறித்துப் பேசினால், வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள்' - பிரியங்கா காந்தி

வேட்பாளர்கள் யாரேனும் சாதி, மதம் குறித்துப் பேசினால் மக்களாகிய நீங்கள் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள் என டேராடூனில் காணொலி பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

வேட்பாளர்கள் யாரேனும் சாதி, மதம் குறித்துப் பேசினால் மக்களாகிய நீங்கள் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள் என டேராடூனில் காணொலி பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். 

ஐந்து மாநிலத் தேர்தலில் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்திற்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், இன்று டேராடூனில் காணொலி பிரசாரத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி பேசியதாவது: 

'நடப்பு ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏழை அல்லது நடுத்தர மக்களின் நலனுக்கு எதுவும் இல்லை. 

வைரங்களின் விலை குறைந்துள்ளதாகவும், மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதாகவும் இன்று காலை யாரோ என்னிடம் சொன்னார்கள். நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன..நீங்கள் எப்போது கண்களைத் திறப்பீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், 'தேர்தலின்போது வேட்பாளர்கள் யாரேனும் மதம், சாதி குறித்துப் பேசினால் மக்களாகிய நீங்கள் வளர்ச்சி குறித்து கேளுங்கள். எங்கள் மாநில வளர்ச்சிக்கு என்ன செய்வீர்கள்? என்று கேளுங்கள். 

உத்தரகண்ட் மக்கள் மாற்றத்தைக் காண விரும்பினால் வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று கூறினார். 

முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்திற்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்ட பிரியங்கா காந்தி, மாநிலத்தில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்றும், அதில் 40 சதவீத அரசு வேலைகள், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கரோனாவுக்குப் பின்னர் சுற்றுலாத்துறையை புதுப்பிப்பதில் கட்சி கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.