நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

புதுச்சேரியில் 75வது சுதந்திர தின விழா படகுகள் அணிவகுப்பு

புதுச்சேரியில் அரசு சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில், 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்ற 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி.
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN


புதுச்சேரியில் அரசு சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில், 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி அரசு சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் வகையில், பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில், சனிக்கிழமை 75 எண்ணிக்கைகள் கொண்ட படகுகளின் (வெளிப்புற இயந்திர பொருந்திய கட்டுமரங்களின்) அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image

புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களின் விழிப்புணர்வு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்.

முதல்வர் என்.ரங்கசாமி  கொடி அசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். 

கடலில் 75 படகுகளில் பங்கேற்ற மீனவர்கள் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு நடத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

மாணவர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
இதேபோல் புதுச்சேரி கல்வித்துறை சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களின் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், புதுச்சேரி கடற்கரை சாலையில், 10 கிலோமீட்டர் தொலைவு சென்று விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.