திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாலேயே அதிமுகவிலிருந்து சிலர் வெளியேறி வருவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேச்சு


பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாலேயே அதிமுகவிலிருந்து சிலர் வெளியேறி வருவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளருடன் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "இது அநேகமாக மூன்றரை முனைப் போட்டியாக இருக்கும். திமுகதான் பெரிய அமைப்பு. இது அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளைக் கொண்டுள்ளது.
மேலும், இது (திமுக) நன்கு எண்ணெய் பூசப்பட்ட அரசியல் இயந்திரமாகும். தேர்தல்களை எவ்வாறு நடத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு அனுபவமும் உண்டு.
நான் அதிமுகவை புறக்கணிக்கவில்லை. கிராமப்புறங்களில் அதிமுக ஒரு பெரிய அரசியல் கட்சியாகும். அதிமுகவின் சின்னம் தமிழ்நாட்டில் தனியிடத்தை நிறுவியுள்ளது.
ஆனால், அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக வரவேற்கப்படும் கட்சி அல்ல. சில சமயங்களில், பாஜகவுடன் இருப்பதாலேயே அதிமுகவிலிருந்து சிலர் விலகிச் செல்கின்றனர்.
விஜய்யின் கட்சியையும் புறக்கணிக்க முடியாது. அவருக்கு நிறைய ஆதரவு கிடைக்கிறது. அவர் மிகவும் பிரபலமான திரை நட்சத்திரம். ஆனால், அவரின் புகழை ஆதரவாகவும், ஆதரவை வாக்குகளாகவும் மாற்றுவதற்கு அவர் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். என் கணிப்பின்படி, அவர் நியாயமான வாக்குகளைப் பெறுவார்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...