/

2020-இல் 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை: மத்திய அரசு

கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த 2020-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெறும் 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.  

News image

2020-இல் 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை: மத்திய அரசு

Updated On :2 பிப்ரவரி 2021, 9:35 am

புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த 2020-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெறும் 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 75 சதவீதம் குறைவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலத் பட்டேல், மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுமார் ஒரு கோடியே 93 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும், இது 2018-ஆம் ஆண்டில் 1 கோடியே 56 லட்சமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 1 கோடியை எட்டியதாகவும், அந்த ஆண்டில் பயணிகள் வருகை 1 கோடியே 4 லட்சமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020-ஆம் ஆண்டில் 26 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 75 சதவீதம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.