ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டது: உத்தரப் பிரதேச துணை முதல்வரின் 'கண்டுபிடிப்பு’

மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டதாக நிகழ்வு ஒன்றில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

News image
Updated On :31 மே 2018, 10:35 am

மதுரா: மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டதாக நிகழ்வு ஒன்றில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் 'ஹிந்தி இதழியல் தினம்' புதனன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது மகாபாரத காலத்திலேயே இதழியல் துவங்கி விட்டதாக அவர் பேசியிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.     

நிகழ்வில் அவர் பேசியதாவது:

மகாபாரதத்தில் வரும் புராண கதாபாத்திரமான சஞ்சயன் ஹஸ்தினாபுர அரண்மனையில் அமர்ந்தபடியே, பார்வையற்ற மன்னர் திருதிராஷ்ட்ரனுக்கு, குருஷேத்ர போர் காட்சிகளை பறவைப் பார்வையில் எடுத்து உரைக்கிறான்.

இது நேரடி ஒளிபரப்பு இல்லை என்றால் வேறு என்ன?

உங்களது கூகுள் இப்பொழுதான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் எங்களது கூகுள் வெகுகாலத்திற்கு முன்னமே செயல்படத் துவங்கி விட்டது. நாரதர் ஒரு தகவல் களஞ்சியம். அவர் 'நாரயணா என்று மூன்று முறை உச்சரிப்பதன் வாயிலாக, உலகின் எந்த இடத்திற்கும் விரைவில் செல்ல முடியும். அதே போல தகவல்களையும் பரிமாற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். பாஜக தலைவர்கள் இவ்வாறு பேசி சர்ச்சையில் சிக்குவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையான சம்பவமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.