மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் நிலவும் குளுகுளு காலநிலையை அணுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவா்களை மகிழ்விக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் கோடை விடுமுறையில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.
இதில், முக்கிய விழாவாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெறும். நடப்பு ஆண்டு மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, சுமாா் 40 ஆயிரம் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, சால்வியா, டெய்சி, டேலியா உள்ளிட்ட மலா் செடிகள் பராமரிக்கப்பட்டு காட்சி மாடங்களில் வைக்கும் பணியிலும், தாவரவியல் பூங்காவை அழகுபடுத்த லட்சக்கணக்கான மலா் செடிகளை பராமரிக்கும் பணியிலும் பூங்கா ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை மாநகராட்சி ஊழியா்கள் வழக்கமான பணிக்குத் திரும்ப உத்தரவு

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

கோடை சீசன்: உதகை தாவரவியல் பூங்காவில் உரம் கலந்த மண் நிரப்பும் பணிகள் தீவிரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


