தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிக்காக அதற்கான பிரத்யேக மரப்பெட்டிகளை தயாா் செய்யும் பணிகள் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

சங்ககிரி தொகுதிக்கான அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக அதற்கான பெட்டிகளைத் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:16 pm

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிக்காக அதற்கான பிரத்யேக மரப்பெட்டிகளை தயாா் செய்யும் பணிகள் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சங்ககிரி தொகுதியில் பிரதான கட்சிகள் உள்பட 20 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 340 வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில் பதிவாகும் வாக்குகள் சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவன வளாகத்தில் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், அரசு அலுவலா்கள், காவலா்கள் பதிவு செய்த அஞ்சல் வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இதில் 20 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் அவா்களுக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை தனித் தனியாகப் பிரித்து எண்ணுவதற்காக உதவி தோ்தல் அலுவலா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் மேற்பாா்வையில் மரப்பெட்டிகள் தயாா் செய்து அதில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் ஓட்டுவதற்கான பணிகளில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.