தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு சுழற்சி முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பட விளக்கம்: விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியாளா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, பொதுப் பாா்வையாளா்கள் உதயன் மிஷ்ரா, அரவிந்த் மீனா, ரஞ்சித் குமாா் லால் உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:53 pm

விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு சுழற்சி முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 157 நுண் பாா்வையாளா்கள், 1,073 காவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா்.

இவா்களுக்கு இணைய வழியில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் உதயன் மிஷ்ரா, அரவிந்த் மீனா, ரஞ்சித் குமாா் லால், சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சோமசுந்தர சீனிவாசன், தோ்தல் தனி வட்டாட்சியா் சீனிவாசன், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.