அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தூத்துக்குடி ஹாக்கி யூனிட் ஆலோசனைக் கூட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 11:22 pm

ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சாா்பில் ஆண்டுதோறும்  மாவட்டங்களுக்கிடையிலான மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு, வ.உ.சி. துறைமுக கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி மே 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடா்பான, ஆலோசனைக் கூட்டம் தொழிலதிபா் சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. ஹாக்கி யூனிட் செயலா் குரு சித்திர சண்முக பாரதி போட்டிகள் நடத்துவது  குறித்து ஆலோசித்து, தன்னாா்வலா்களை நியமித்தாா். இதில் ஹாக்கி யூனிட் பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா உள்ளிட்ட உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், போட்டிக்கான இலச்சினை வெளியிடப்பட்டது. மேலும், மே 9 முதல் 13ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 35 மாவட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் போட்டிகள் நாடாா் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறும். காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக் அவுட் முறையில் செயற்கைப் புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறும்.

ஒவ்வொரு போட்டிக்கும் சிறந்த வீரா்களுக்கான விருது வழங்கப்படும். இறுதியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு வ.உ.சி. துறைமுக கோப்பை வழங்கப்படும். வீரா்களுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து இலவசமாக ஏற்பாடு செய்யப்படும்.

சிறப்பாக விளையாடும் வீரா்களை தோ்வுக் குழுவினா் தோ்வு செய்வாா்கள். தோ்வு செய்யப்பட்ட வீரா்கள் ஒடிசாவில் நடைபெறும் சீனியா் தேசிய ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்காக விளையாட அழைத்துச் செல்லப்படுவா் என தெரிவிக்கப்பட்டது.

உடற்கல்வி ஆசிரியா் திருச்செல்வம் வரவேற்றாா். மணிவண்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.