திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆந்திர நலனை கருத்தில் கொண்டே கூட்டணியில் இருந்து விலகினேன்: பேரவையில் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மக்களின் நலனை கருத்தில் கொண்டே கூட்டணியில் இருந்து விலகியதாக பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

Raghavendran

ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகியது. அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் அக்கட்சி இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சரவையில் இருந்த 2 தெலுங்கு தேசம் உறுப்பினர்களும், ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

ஒன்றுபட்ட ஆந்திரா பிரிந்த பிறகு புதிய ஆந்திர மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. இருப்பினும் போதிய அளவு நிதி ஒதுக்கியுள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறி மத்திய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இதில் எனது தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை. ஆந்திர மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நான் இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். சிறப்பு அந்தஸ்து கோரி 29 முறை தில்லி சென்று பிரதமரைச் சந்தித்தேன். பல முறை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போதைய மத்திய அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுதான்.

எனவே இதில் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாத சூழ்நிலையில்தான் நாங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினோம். பிரிவுக்குப் பிறகு ஆந்திராவுக்காக மத்திய அரசு தெரிவித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்விவகாரத்தில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி பல தடைகளைக் கடந்து வந்துள்ளது. அதுபோல இந்த சூழ்நிலையையும் எளிதில் கடந்து செல்லும். சமீபத்தில் கூட பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.