திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நம்பிக்கையில்லா தீர்மானம் யோசனை கூறியதே நாங்கள்தான்: ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்

பொதுமக்கள் ஏற்படுத்திய அதீத அரசியல் அழுத்தம் காரணமாகவே தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் கட்சியும் இன்று...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

Raghavendran

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை எதிர்த்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இருப்பினும் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அக்கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் அக்கட்சி சார்பில் விரைவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற யோசனையை முதலில் கூறியது நான் தான் என்று நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பொதுமக்கள் ஏற்படுத்திய அதீத அரசியல் அழுத்தம் காரணமாகவே தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் கட்சியும் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தன. ஆனால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று முதலில் யோசனை கூறியது நாங்கள்தான்.

இதனால் மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாகவும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக விவாதிக்க மட்டும்தான். தற்போது ஏற்பட்டுள்ள அதீத அரசியல் அழுத்தம் காரணமாகவே தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் கட்சியும் இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரிவினையின் போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே இதில் நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சியும் போராட வேண்டும் என்பதே தார்மீக பொறுப்பாக இருக்க முடியும். ஆனால், தற்போது அவர்கள் அதை மறுக்கின்றனர். சிறப்பு அந்தஸ்து வழங்குவதை விட மக்களாட்சி மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதான் தற்போதைய தேவையாக உள்ளது. மத்திய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை மீறுவது சரியாக இருக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.