திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கடைசியாக தெலுங்கு தேசம் கட்சி விழித்துக்கொண்டது: எதிர்கட்சித் தலைவர் ஜெகன் கிண்டல்

ஒருவழியாக தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மக்கள் நலனில் கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டதாக ஆந்திர எதிர்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விமரிசித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

Raghavendran

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அக்கட்சித் தலைவரும், ஆந்திர எதிர்கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் ஆந்திர மக்களின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாகவும் ஆந்திர சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடைசியில் தெலுங்கு தேசம் கட்சி விழித்துக்கொண்டதாக விமரிசித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் ஆதரவுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதில் ஒருவழியாக தெலுங்கு தேசம் கட்சி கடைசி நேரத்தில் விழித்துக்கொண்டது. இது அரசியல் நெருக்கடியால் நடந்தாலும், ஒய்எஸ்ஆர் கட்சியை முன்னோடியாக் கொண்டுதான் தெலுங்கு தேசம் செயல்படுகிறது.

இது ஆந்திர மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இவ்விவகாரத்தில் ஆந்திர மக்களின் நலன் காக்கப்படும் வரை எங்கள் கட்சி தொடர்ந்து போராடும். ஆந்திர மக்களின் வளர்ச்சியே எங்களுக்கு என்றும் முக்கியம். இதில் எங்களுக்கு எவ்வித அரசியல் பாகுபாடுகளும் கிடையாது.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் நாங்கள் கொண்டு வந்தாலும், வேறு ஒருவர் கொண்டு வந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். இதில் ஆந்திர மக்களின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணம். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம் என்று ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.