திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம்: சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தேவைப்பட்டால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

Raghavendran

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரும் விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) எம்.பி.க்கள் தீவிரமாக எழுப்பி வருகின்றனர். சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரும் கோரிக்கை குறித்தும், வருவாய் பற்றாக்குறை ஆந்திரத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றுவது தொடர்பாகவும் அக்கட்சி எம்.பி-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், அக்கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சியான தங்கள் கட்சியின் உறுப்பினர்களை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஒய்எஸ்ஆர் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தார். இவ்விவகாரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே பாஜகவுடன் யார் கூட்டணியில் உள்ளனர் என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்து, தனக்கு ஆந்திர மக்களின் நலன்தான் முக்கியம் என்று கூறினார்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஆந்திர மாநில எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். 

மேலும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டி காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி போன்ற முக்கியத் தலைவர்களைச் சந்தித்து ஒய்எஸ்ஆர் உறுப்பினர் யூ.வி.சுப்பா ரெட்டி ஆதரவு திரட்டினார். இதையடுத்தும் மத்திய அரசு ஆந்திர மாநிலத்தை புறக்கணித்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி ராஜிநாமா செய்வார்கள் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் தெரிவித்ததாவது:

தேவைப்பட்டால் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம். இதை யார் செய்தார்கள் என்பது எங்களுக்கு முக்கியமில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான முதலாவது ஆட்சியின்போதும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து செயல்பட்டது. அப்போதையப் பிரதமர் திரு.வாஜ்யாப் அவர்கள் எங்களுக்கு மத்திய அமைச்சரவையில் 6 இடங்களை வழங்க முன்வந்தார். ஆனால், பதவிகளுக்கு நாங்கள் ஆசைப்படவில்லை. சிறந்த கூட்டணி கட்சியாக விளங்கினோம்.

மத்திய அரசின் ஒவ்வொரு திட்டம் தொடர்பாகவும் வாஜ்பாய் எங்களுடன் ஆலோசனை நடத்துவார். குறிப்பாக தங்க நாற்கர சாலை திட்டம் எங்களுடைய ஆலோசனையின் பேரில் செயல்படுத்தப்பட்டதுதான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.