மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது
நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே புழுதிப் புயல் ஏற்படுகிறது.


நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே புழுதிப் புயல் ஏற்படுகிறது.
இந்நிலையில், புவனேஸ்வர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 2 தினங்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஒடிஸாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...