2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவருக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல்

ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:00 pm

Raghavendran

ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானை கோழைகளின் நாடு என குறிப்பிட்டுள்ள ரவீந்தர் ரெய்னா இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நான் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானின் லாஹூர், கராச்சி, ராவல்பிண்டி, முஸாஃபர்பாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் தற்போது குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு இதுபோன்ற கொலை மிரட்டல்கள் அதிகரித்துள்ளது. இப்போது கூட ஜம்மு-வில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் கலந்துகொண்டபோது கராச்சியில் இருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஷுஜாத் புஹாரிக்கு நடந்த அதே நிலைமை எனக்கும் நடக்கும் என்று மிரட்டியுள்ளான். இதுகுறித்து மாநில ஆளுநர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.